மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனி விலையை 100 ரூபாவாகநிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது . சீனி விலை அதிகரித்தமை தொடர்பில்உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.