கண்டி பிரதான நகரில் நிலவும் கடும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாதிரி போக்குவரத்து முனையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில், பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களை மையமாகக் கொண்டு பொது மக்களுக்கு வசதியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நகரின் சில பகுதிகளை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நடைமுறை தீர்வுகளை வழங்க ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.