கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கென கடன் வழங்கும் மத்திய வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கென கடன் வழங்கும் மத்திய வங்கி!

கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் தொகையுடைய கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது

கொவிட்-19 நோய்த் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு 'சௌபாக்கிய' கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கிய (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 ஜூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.

இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

மேலும், திட்டத்தின் கட்டம் II கீழ் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மீள் கடன் வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு 1 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மேலும் ரூ.120 பில்லியனை வழங்குவதற்கு தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.