கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் முன்னெடுப்படும் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.