கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில்நேரலையில் ரசிகர்களுடன் பேசுவது, சக கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடுவது தற்போது அதிகமாகி உள்ளது.
பிரபலங்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிட குறிப்பிட்ட தொகை வசூலிப்பதுவழக்கம். அவ்வாறு லாக்டவுன் நேரத்தில் (மார்ச் 12-ம் தேதி முதல் மே-14 வரை) விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதித்துஉள்ளார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் டாப் 10-ல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். கோலி 3 ஸ்பான்சர்கள் பதிவின் மூலமாக 3 கோடியே 60 லட்சம் சம்பாதித்துள்ளார். கோலியை இன்ஸ்டாகிராமில் சுமார் 6 கோடியே 21 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.
போர்சுகல் கால்பந்து அணயின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் மூலம் 18 கோடி ரூபாய் சம்பாதித்துமுதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி(ரூ.12.5 கோடி) 2-வது இடத்திலும் பிரேசில்கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.11.5 கோடி)3வது இடத்திலும் உள்ளனர்.