இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார்தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியை நோக்கிச் சென்ற வாகனமே மடுக்கந்தை பாடசாலைக்குமுன்பாக நடுவீதியில் திடீரென்று குடை சாய்ந்துள்ளது.
அதிக வேகம் காரணமாக வாகனம் தடம்புரண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிகவிசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.