நடுவீதியில் தடம்புரண்ட வாகனம் - சம்பவம் வவுனியாவில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடுவீதியில் தடம்புரண்ட வாகனம் - சம்பவம் வவுனியாவில்

வவுனியா - மடுக்கந்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வியாபார நிலையங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றவாகனமொன்று குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார்தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியை நோக்கிச் சென்ற வாகனமே மடுக்கந்தை பாடசாலைக்குமுன்பாக நடுவீதியில் திடீரென்று குடை சாய்ந்துள்ளது.

அதிக வேகம் காரணமாக வாகனம் தடம்புரண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிகவிசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.