சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு அதிசொகுசு வீடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு அதிசொகுசு வீடுகள்!

கொவிட் 19 தொற்றாளர்களை பராமறிக்க அதிகாலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்கள் குடும்பம் சகிதம் இலங்கையில் அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் சுகாதார செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுடன் நேற்று (09) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அங்கு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற வைத்தியசாலைகளின பணிப்பாளர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் கொவிட் 19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது நோயாளர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகளை சுகாதார அமைச்சருக்கு தெளிவுப்படுத்தினர்.


இதற்கு பதிலளித்த அமைச்சர், மேற்குறித்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜிவ முனசிங்கவிற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உரிய உணவு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பொறுப்பாகும் எனவும் கூறினார்.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜிவ முனசிங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.