அரச ஊழியர்களின் ஆடையில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களின் ஆடையில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்!!!

பாராளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் பற்றிக் ஆடை அணிந்து வர வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார் . ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தகவலை ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார் . அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் தொடர்பில்கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்கள் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பற்றிக் ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கைத்தறி மற்றும் புடவை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.