யாழ்ப்பாணம் - புலோலயில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் மோதல் - அடித்து நொருக்கப்பட்ட வர்த்தக நிலையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ்ப்பாணம் - புலோலயில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் மோதல் - அடித்து நொருக்கப்பட்ட வர்த்தக நிலையம்!

யாழ். வடமராட்சி - புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர்வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வர்த்தக நிலையம் ஒன்று ரவுடிகளால் உடைக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏற்கனவே பகைமைகொண்ட இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது - 22) புவனேஸ்வரன் குகராஜ் (வயது 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கானநிலையில் நேற்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது . பருத்தித்துறை பொலிஸார்தெரிவித்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.