நேற்று புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏற்கனவே பகைமைகொண்ட இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது - 22) புவனேஸ்வரன் குகராஜ் (வயது 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கானநிலையில் நேற்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது . பருத்தித்துறை பொலிஸார்தெரிவித்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டது.