டி20 உலகக் கிண்ணம் குறித்த தனது இறுதி முடிவை ஒத்திவைத்தது ஐசிசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டி20 உலகக் கிண்ணம் குறித்த தனது இறுதி முடிவை ஒத்திவைத்தது ஐசிசி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட்போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிதிட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பும் நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிறகேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் இணையம் வழியாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் அந்தக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜூன் 10 அன்று மீண்டும் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கோப்பைகுறித்து முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்தது.

இந்த வருடம் டி20 உலகக் கோப்பை நடைபெறாவிட்டால் இந்த வருடப் போட்டியை 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசிதிட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.


டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐதிட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

இந்த வருடம் நடைபெறுவதாக உள்ள டி20 உலகக் கோப்பையை அடுத்த வருடம் நடத்திக்கொள்வதாக ஐசிசியிடம் கிரிக்கெட்ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாகவும் மற்றும் பயணக்கட்டுப்பாடுகள்நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிருப்பம் தெரிவித்து ஐசிசிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.

இந்த வருடம் டி20 உலகக் கோப்பையை நடத்துவது என்பது அபாயகரமானது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமைச்செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை குறித்து முடிவெடுக்க நேற்று ஐசிசி கூட்டம் மீண்டும் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் கொரோனா  அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியவிளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு பேட்டியில், கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் சர்வதேசப் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியாதயாராகி வருகிறது. அப்போட்டிகளுக்குப் பார்வையாளர்களை அனுமதிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பை குறித்து தனது இறுதி முடிவை ஒத்திவைத்துள்ளது ஐசிசி.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.