இலங்கையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் வெகு விரைவில்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் வெகு விரைவில்!!!!

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வெகு விரைவில் ஏற்பட கூடும் என சுகாதார பிரிவுதெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வடபகுதிக்கு வரும் இந்திய வர்த்தகர்களின் மூலம் இந்த நிலை ஏற்படலாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான நிலையாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா ஏற்பட்ட முதலாவது அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் . எனினும் சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் காணுவதும் பாரியசிக்கலாக மாறிவிடும் என சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.


இதுவரையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுப்படுத்தவில்லை என்பதனால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வரும் நபர்களைஉடனடியாக நிறுத்தவில்லை என்றால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அரசாங்கத்திற்குஎச்சரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.