எதிர்வரும் ஞாயிறு (28) மாலை 4.00 மணிக்கு அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 100 பேரை இணைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியில் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இந்நிகழ்வினை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.