நுவாபாடா மாவட்டத்தின் பராகன் கிராமத்தைதச் சேர்ந்த லாபே பாகல் எனும் மூதாட்டியையே அவரின் மகள் கட்டிலில் வைத்து இழுத்துச் சென்றார்.
லாபே பாகல் (Labhe Baghel) 120 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1500 ரூபா பணத்தை வங்கியிலிருந்து மீளப் பெறுவதற்கு அவர் நேரில் வர வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினராம்.
அதனால், 70 வயதான அவரின மகள் குன்ஜா தேய் ( Gunja Dei ) வேறு வழியின்றி தனது தாய் படுத்திருந்த கட்டிலை வங்கியை நோக்கி இழுத்துச் சென்று சுமார் 400 மீற்றர் தூரத்திலுள்ள வங்கியை அடைந்தார். இக்காட்சி வீடியோவிலும் பதிவாகியுள்ளது.
இப்பெண்கள் வங்கியை அடைந்தவுடன் அவர்களின் நிலையைப் பார்த்த வங்கி அதிகாரிகள் உடனடியாக லாபே பாகலின் பெண்ணின் பணத்தை வழங்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை அறிந்த பலர் வங்கி அதிகாரிகளை விமர்சித்துள்ளனர்.
மேற்படி வீடியோவைப் பார்த்த உள்ளூர் சட்டசபை உறுப்பினர் ஆதிராஜ் பானிகிராஹி, வங்கி அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உத்கல் கிராம்யா வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆதிராஜ் பானிகிராஹியுன் தொடர்புகொண்டதுடன் இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மூத்த பிரஜைகளுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவைகளை வழங்குமாறு பிராந்திய வங்கிகளின் முகாமையாளர்களுக்கு ஒடிசா பிரதம செயலாளர் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: மெட்ரோ நியூஸ்