இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான பூஜானி லியனகே நேற்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
33 வயதான அவர் நேற்று குறுநாகல், கடுபொத பகுதியில் வைத்து மோட்டர் சைக்கிளில் பயணிக்கும் போது வேறு வாகனம் ஒன்றுடன் மோதியதில் பலியானார்.
அவர் இலங்கை பிரதான கிரிக்கெட் அணிகலில் விளையாடாத போதிலும், அவ்வப்பொழுது குலாமில் வந்து போயுள்ளார். Leg Spinning பந்து வீச்சில் சிறந்து விளங்கிய அவர் உள்நாட்டு கிரிக்கெட் சுற்று மற்றும் மாகாண ரீதியான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மூத்த வீராங்கனை ஆவார்.
இச்செய்தியை முன்னால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி ஷஷிகலா சிறிவர்தன ஊடகத்திற்கு தெரிவித்து உறுதி செய்துள்ளார்.