இன்று 55 பேர் பூரண குணம்; மேலும் 13 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,902 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 55 பேர் பூரண குணம்; மேலும் 13 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,902 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,902 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (15) மாலை 6.30 மணிவரை 13 தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தொற்றுநோய்ப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் மாலைதீவில் இருந்து வந்த 06 பேர், குவைத்தில் இருந்து வந்த 05 பேர் மற்றும் பங்களாதேஸில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்றும் 55 பேர் முற்றாக குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1,342 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 11 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.