சீனா, வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவெடுத்தது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 69.7 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53,575க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.