கடந்த தேர்தல்களை போல் அல்லாது இம்முறை பொதுத்தேர்தலுக்கான செலவு சுமார் 1000 கோடி ரூபா வரை அதிகரிக்கலாம் என தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் செலவு சுமார் 700 கோடி என இருந்த நிலையில் இம்முறை அது மேலும் 300 கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த இந்த மேலதிகமாக 15,000 அதிகாரிகளை கடமையில் அமர்த்த தேர்தல்கள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.