அவுஸ்திரேலியாவில் சுமார் 100 நபர்கள் இலங்கைக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவுஸ்திரேலியாவில் சுமார் 100 நபர்கள் இலங்கைக்கு!

அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் மெல்பர்ன் நகரில் இருந்து இன்று அதிகாலை குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


இவர்களுள் அதிகமானவர்கள் அவுஸ்திரேலியாவில் உயர் கல்விக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை இந்திய கடற்படை வீரர்கள் 58 பேர் சென்னையில் இருந்து நேற்று (18) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக குறித்த குழுவினர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.