இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,648 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,648 ஆக உயர்வு!

சற்றுமுன் வரை (02.06.2020 06.45 PM) இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மூவரில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கடற்படையினருடன் நெருங்கிப் பழங்கிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 814 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.