அந்தவகையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் கொழும்பில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன் பிரகாரம் கர்ப்பிணி பெண் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒருவரை முல்லேரியா கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் ஏனைய 9 பேரையும் காத்தான்குடியில் உள்ளகொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.