அவுஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல் : அரசின் முக்கிய தகவல்களை திருட முயற்சி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவுஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல் : அரசின் முக்கிய தகவல்களை திருட முயற்சி

அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர்ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுபிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. இது எப்போது தொடங்கியது என்ற தகவல் வெளியாகவில்லை.

அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹேக்கர்கள் முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருடி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாகவும், அதை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா விவகாரத்தில் அவுஸ்திரேலியா - சீனா இடையே மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.