இன்று இதுவரை 10 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,915 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இதுவரை 10 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,915 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலும் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (16) மாலை 8.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,371 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 533 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஈரானிலிருந்து அழைத்துவரப்பட்ட 04 பேர் மற்றும் 06 கடற்படையினர் அடங்குவர்.

குணமடைந்தவர்களில் கடற்படையினர் 22 பேர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஓரிரு வாரங்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிஷ்டவசமாக எந்த மாற்றமும் இல்லை.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.