கடந்த ஐந்து ஆண்டுகளில் 88 ஆயிரம் பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர். -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த ஐந்து ஆண்டுகளில் 88 ஆயிரம் பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர். -ஞானசார தேரர்

இலங்கையில் உள்ள 8 ஆயிரம் பேர் மற்றும் தொழில்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள 80 ஆயிரம் பேர் வரை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாகவும் நேற்று (15) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஐந்தாண்டில் இவ்வாறு 88 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி தான் கூறிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அல்-குர்ஆன் கற்பிப்பதற்கு அப்பால் சென்று ஹதீஸ்களில் காணப்படும் விடயங்களில் வஹாப் வாதம் மற்றும் அடிப்படை வாதம் பரப்பப்படுவதாகவும் தேரர் குறிப்பிட்டிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.