இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த அனைவரும் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,602 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்சமயம் 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.