சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் கத்திகளை கொண்டு வந்திருந்த நிலைமையிலும் சபாநாயகரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கையில் கிடைத்ததை கொண்டு தாக்குதல் நடத்த நேரிட்டது. மிளகாய் தூள் கலந்த தண்ணீரை கொண்டு வந்தது யார் என்பது எனக்கு தெரியாது.
அனைத்தையும் ஆதரித்து கைகளை உயர்த்துவதற்காக மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை. 52 நாள் அரசாங்கத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர் எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.