கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 79 வயது நபர் மிக்க நாளாக வீடு திரும்பவில்லை.
இதே நேரம் அதுருகிரிய பகுதியில் அனாதை பிணம் ஒன்றை பொலிஸார் மீட்டிருந்தனர்.
குறித்த நபர் வீடு திரும்பாத மீகொட பகுதியை சேர்ந்த வயோதிபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டாரிடம் பொலிஸார் ஒப்படைத்து இறுதி சடங்கும் நடந்தது.
இந்நிலையில் நேற்று குறித்த வயோதிபர் வீடு திரும்பி குடும்பத்தினரையும், ஊர்மக்கலையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.