மொரட்டுவ துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையில் கைதானவர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொரட்டுவ துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையில் கைதானவர்!!

Dhananjaya De Silva
மொறட்டுவ, சொய்சாபுர பகுதியில் சமீபத்தில் உணவகம் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபரை STF இனறினால் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று இரவு (30) இரவு 8 மணியளவில் பாணந்துறை, எழுவில பகுதியில் வைத்து STF இனரால் கைது செய்ப்பட்டார்.

மொறட்டுவ, சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மீது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சம்பவம் தொடர்பில், ஒரு காரில் வந்த ஒரு குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி சென்ற காட்சி அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது.

மேலும் குறித்த ஹோட்டலில் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 19ஆம் திகதி அன்று ஊரடங்கு அமுலில் இருக்கும் சமயத்தில், அடையாளம் தெரியாத குழுவினரால் குறித்த ஹோட்டலுக்கு வாள்வீச்சு இடம்பெற்றது. பின்னர் 29ஆம் திகதி அன்று அதிகாலை 3 காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத குழு ஒன்று உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

குறித்த சம்பவம் நடந்து அடுத்த நாளான நேற்றைய தினம் (30) ஹோட்டல் உரிமையாளர் ஒரு ஆடியோ கிளிப்பையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார், அதில் மே 30ஆம் திகதி காலையில் தாக்குதல் நடத்தியவர் எனக் கூறி தன்னுடன் பேசி, உன்னை விரைவில் கொலை செய்துவிடுவேன் என்றும் காவல்துறையினருக்கு உனக்கு உதவ முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையில் செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருப்பவர் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.