இந்த நாட்டில் நெருக்கடி நிலமைகள் உருவாகும் போது இனவாதம் தலைதூக்குவது கவலைக்குறிய விடயம் என ஜனாதிபதி சட்டத்தரணி அல் ஜசீராவுக்கு கூறியதாக குற்றம் சுமத்தி இந்த முறைப்பாட்டினை சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்துகொண்டு சர்வதேசத்தில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வண்ணம் அவர் செயற்பட்டுள்ளதாகவும் அல் ஜசீரா குறித்த பதிவை நீக்கியுள்ள போதும் இன்னும் 40க்கு அதிகமான இணைய தளங்கள் குறித்த பதிவை அப்படியே வைத்திருப்பதாக சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ கூறினார்.
அலி சப்ரியின் இந்த செயல் இனவாதத்தை ஊக்குவிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தீனி போடுவதாக உள்ளதாக சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கருத்தை தான் அல் ஜசீராவுக்கு வழங்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.