ஒரு காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.
சம்பவ இடத்தில் சில பொலிஸ் அதிகாரிகளும் ஹோட்டலுக்கு அருகில் இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன.
எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை, ஆனால் துப்பாக்கிச்சூட்டில் ஹோட்டல் வளாகம் சேதமடைந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டபோது, ஒரு குழு அவரை அச்சுறுத்தியதாகவும் சில வாரங்களுக்கு முன்பு அவரது ஹோட்டல் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பின்பு, இன்று காலை தன்னுடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் தொலைபேசி வாயிலாகஉரையாடி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மேலும் பொலிஸாரால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சவால் விட்டதாகவும் தெரிவித்தார்.