அவரது தந்தையின் மரணத்துடன், ஜீவன் தோண்டமான் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் வகையிலான புகைப்படம் ஒன்று சிங்கள செய்தி ஊடகம் ஒன்று வாயிலாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும், திரு. ஜீவன் தொண்டமான் கோவிட் 19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறியிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை பாதுகாக்க இரண்டு நபர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என சுகாதார ஒழுங்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்த புகைப்படத்தில் எவரும் அந்த சட்டத்தை பின்பற்றியவாறு தெரியவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பான உண்மை நிலையை ஜீவன் தொண்டமான் விளக்குவார் என நம்புகிறோம்.
Source: HERE
-யாழ் நியூஸ்