பிரித்தானிய Oxford பல்கலைக்கழத்தினால் ChAdOx1 nCoV-19 எனும் மேற்படி தடுப்பு மருந்து இக்குரங்களுக்கு செலுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் உள்ள சூழலில் குரங்குகள் விடப்பட்டன.
றீசஸ் மகாக் (rhesus macaque) எனும் இனத்தைச் சேர்ந்த 6 குரங்குகளிடமே இவ்வாறு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து செலுத்தப்படாத குரங்குகளைவிட, தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட குரங்குகளின் நுரையீரல் மற்றும் சுவாசத்தொகுதியில் கொரோனா வைரஸ் குறைவாக இருந்தன என ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் பங்குபற்றினர்.
றீசஸ் மகாக் குரங்குகள், மனிதர்களினுடையதைப் போன்ற நோயெதிர்ப்புச் சக்தியைக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுப் பெறுபேறு இன்னும் ஏனைய விஞ்ஞானிகளால் ஆய்குட்படுத்தப்பட்டு முறைப்படி வெளியிடப்படவில்லை. ஆனால், லண்டன் துப்புரவு மற்றும் வெப்பமண்டல மருத்துவ பாடசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் இவான்ஸ் தெரிவிக்கையில், இப்பரிசோதனை மிக உயர்தரமானதும் மிக உற்சாகமளிப்பதுமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு ஊடாக நடத்தப்படும் தடுப்பு மருந்து ஆய்வுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மனிதத் தொண்டர்கள் பங்குபற்றுகின்றனர்.
https://www.sciencemediacentre.org/expert-reaction-to-preprint-on-the-chadox1-ncov-19-vaccine-and-sars-cov-2-pneumonia-in-rhesus-macaques/