கருஞ்சிறுத்தை பொறியில் சிக்குண்ட காணியின் உரிமையாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கருஞ்சிறுத்தை பொறியில் சிக்குண்ட காணியின் உரிமையாளர் கைது!

ஹட்டன் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று பொறியில் சிக்குவதற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொறி வைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளராவார்.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தின் வாழைமலை பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் வைக்கப்பட்டிருந்த பொறியில் கருஞ்சிறுத்தை ஒன்று நேற்று (26) சிக்கியது.

இந்த கருஞ்சிறுத்தை தற்போதைக்கு இந்நாட்டில் வாழும் மிகவும் அரிய வகை இனமாகும்.

வனவிலங்குகள் அதிகாரிகள் கருஞ்சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்ட சந்தர்ப்பத்தில் அது காயமடைந்திருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அதன் உடல்நிலை தேறியது.

வனவிலங்குகள் திணைக்களத்திற்கு சொந்தமான உடவலயில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கருஞ்சிறுத்தை அழைத்து செல்லப்பட்டுள்ளது.

உலகில் வாழும் 8 சிறுத்தை இனங்களில் இலங்கை சிறுத்தை என அழைக்கப்படும் இந்த இனம் மிகவும் அரிதானதாகும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.