இலங்கையில் மேலும் 53 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு இனம்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர்.
இன்றைய தினம் முன்னையதாக 53 கடற்படை வீரர்கள் இனம்காணப்பட்டிருந்தனர். இன்றைய தினத்திற்கு இதுவரை மொத்தம் 106 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 683 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.