இலங்கையில் மேலும் 28 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு இனம்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்துவரப்பட்டவர்கள் ஆவர்.
இதன்படி, இன்றைய தினம் (8.45 PM) வரை 134 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 711 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.