2020ஆம் ஆண்டுக்கான க. பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் நாளை (12) முதல் online முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி அமைச்சின் www.info.moe.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்களை கோரும் கடைசித் திகதி ஜுன் மாதம் 12 என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.