வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களின் ஊடாக இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கின்றன.
ஹொரன பகுதியில் குறித்த இராணுவ சிப்பாய் விஜயம் மேற்கொண்ட 4 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், உரிமையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மேலும் இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 775 ஆகும்.