இன்று கம்பளை வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று கம்பளை வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!

கம்பளை இலங்காவத்தை பிரதேசத்தில் வர்த்தகம் நிலையம் ஒன்றின் மீது இன்று (20) அதிகாலை இரவு 1 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் பெற்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தக நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு கைக்குண்டையும் கம்பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அங்கு மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த வர்த்த நிலையத்தைச் நடத்திச் செல்பவரின் வீட்டு மேல் தளத்திலிருந்து வெடிக்காத நிலையில் மேலும் ஒரு பெற்ரோல் குண்டை மீட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவம் இடம் பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.