இதனால் வர்த்தக நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு கைக்குண்டையும் கம்பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அங்கு மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த வர்த்த நிலையத்தைச் நடத்திச் செல்பவரின் வீட்டு மேல் தளத்திலிருந்து வெடிக்காத நிலையில் மேலும் ஒரு பெற்ரோல் குண்டை மீட்டுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவம் இடம் பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.