இரத்தினபுரி, வெவல்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 09 வயதான பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் லெல்லோபிடிய பிரதேசத்தில் கடையொன்றில் மீது மரமொன்று வீழ்ந்தால் 30 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக கஹன்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அதிக மழை காரணமாக பெல்மடுல்ல பிரதேசத்தில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 17 வீடுகளைச் சேர்ந்த 60 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது