கவசக்கி நோய் தொடர்பிலான புதிய அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கவசக்கி நோய் தொடர்பிலான புதிய அறிவித்தல்!

குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என குழந்தைகள் நோய் தொடர்பான விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். 

இந்த நோய் கடந்த 20 வருடங்களுக்கு மேல் நாட்டில் காணப்படுவதாக தெரிவித்த அவர் தற்போது குறைந்தளவான நோயாளிகளை இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உலகில் கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் கவசாக்கி நோய் தொற்று குறித்து எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இந்த நோய் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக கண்டி வைத்தியசாலையின் உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் டபிள்யூ.கே.குலரத்ன தெரிவித்துள்ளார். 

அதேபோல் எலி காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியான அரச மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுமாரு அவர் கேட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.