மக்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருப்பினும், நேற்றைய நாளில் அவர்கள் செயற்பட்ட விதம் திருப்தி அடையும் வகையில்இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
சமூக இடைவெளியை பேணுவதில் மக்கள் நேற்றைய தினத்தில் முழுமையான அக்கறை காட்டவில்லை எனவும் வாகனபோக்குவரத்தின் போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினத்தில் மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.