வீதியில் நடந்து சென்றவர், கீழே விழுந்து திடீர் மரணம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதியில் நடந்து சென்றவர், கீழே விழுந்து திடீர் மரணம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார்.

இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச்சேர்ந்த தங்கதுரை(வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ல்தலத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை நோயாளர் காவு வாகனம் முலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொதுவைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.