மஸ்கெலியாவில் பிடிபட்ட கருஞ்சிறுத்தை! (PHOTOS)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஸ்கெலியாவில் பிடிபட்ட கருஞ்சிறுத்தை! (PHOTOS)

உலகில் அரிதான கருஞ்சிறுத்தை ஒன்று மலையகத்தில் மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தவலை ஒன்றில் சிக்கிய நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா - நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான - வாழைமலை பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயேஅந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டுள்ளது.

அருகிவரும் உயிரினமான கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் மலைக்காடுகளில் வசிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர்வனிஜீவராசிகள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

சில வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளிகளின் மூலமாக கருஞ்சிறுத்தையின் நடமாட்டம்அவதானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த விலங்கினத்தின் பாதுகாப்பு கருதி , அது வசிக்கும் பகுதி குறித்த விபரங்கள் வெளியாக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பகுதியில் இந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டுள்ளது.

வலையிலிருந்து அதனை விடுவிக்கும் பணிகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.