மேலும் அம்மனுவில் குறித்த அதிகாரிக்கும் 'அபே ஜன பல பக்ஷய' வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள பிரச்சினை காரணமாக குறித்த அதிகாரி நிராகரித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களின்படி இதுபோன்ற பரிந்துரைகளை நிராகரிக்க மாவட்ட தலைமை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என ஞானசார தேரர் அதில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.