மூன்று தாசாப்த போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் காணாமற்போன படைவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று (19) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி பாராளுமன்ற மைதானத்தில் உள்ள தேசிய படைவீரர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறுகிறது.
இதில், சர்வமதத் தலைவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத்தளபதிகள் அடங்கலாக பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் ஆத்மசாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
படைவீரர்கள் ஆற்றிய சேவைகளை மதத் தலைவர்கள் பாராட்டிப் பேசினார்கள்.