தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.
குறித்த போதகரால் நேற்று (16) பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 பெண்கள், 09 ஆண்கள், சிறுவர்கள் 04 பேர் உட்பட 27 பேர் இருந்துள்ளனர்.
இவர்களில் சிலர் முகக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை கூறப்படுகிறது.