அரசாங்கத்திற்கு எந்தவித அறிவிப்பும் அளிக்காமல் IOC பெட்ரோலின் விலையை உயர்த்தியுள்ளது. -அமைச்சர் மஹிந்த அமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கத்திற்கு எந்தவித அறிவிப்பும் அளிக்காமல் IOC பெட்ரோலின் விலையை உயர்த்தியுள்ளது. -அமைச்சர் மஹிந்த அமரவீர

mahinda-amaraweera
IOC நிறுவனம் பெட்ரோலின் விலையை அதிகரித்தாலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தமது மையங்களில் எரிபொருள் விலையில் அதிகரிக்கவில்லை என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து IOC எந்தவித அறிவித்தாலும் விடுக்கவில்லை என அமைச்சர் கூறினார்.

IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .5 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, ரூ.137 ஆக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோலின் புதிய விலை ரூ. 142 ஆக உயர்ந்தது.

அதிக லாபம் ஈட்டுவதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என கேகாலை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கபீர் ஹாஷிம் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும்,  எரிபொருள் விலையை எந்தவித முன்னறிவித்தவும் இன்றி IOC அதிகரித்துள்ளது என பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.