இந்த நிலையில் இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அஜித் ரோஹணவின் புதல்வி தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் பெலரூஸ் அரச பல்கலைகழகத்தில் கல்வி கற்பதாகவும் அங்கு மேலும் 400 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெற இருக்கும் இறுதிப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரே தான் இலங்கைக்கு வருகைதர இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.