ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மே 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை 05 மணிக்கு ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்டு மீண்டும் 23ஆம் திகதி சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 08 மணிமுதல் அதிகாலை 05 மணிவரை அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா  மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் 16ஆம் திகதி வரை அவ்வாறே முன்னெடுக்கப்படுவதுடன் ஊரடங்கின் பின் மீண்டும் 18ஆம் திகதி பொருளாதார செயற்பாடுகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.