ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு! –இருவர் காயம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு! –இருவர் காயம்

கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் யாழில் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக இன்று மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி என்றழைக்கப்படும் குறித்த வாள்வெட்டுக் குழுவினர்,  முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2 முச்சக்கரவண்டிகளை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், இவ்வாறானதொரு சம்பவம்  இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.