பிறந்த பச்சிளம் குழந்தையை நாய்க்கு தீனாக்கிய தாய்! இலங்கையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறந்த பச்சிளம் குழந்தையை நாய்க்கு தீனாக்கிய தாய்! இலங்கையில் சம்பவம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் சமிளயடிவட்டை,
கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்திசெய்யும் பகுதியில் பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இறையாக்கிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்று (10) மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில்புரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது வீட்டுக்கு வந்துசென்ற ஒருவராலேயே குறித்த பெண் தாய்மையினையடைந்ததாகவும் நேற்று குறித்த குழந்தையினை வீட்டுக்கு அருகில் பிரசவித்த நிலையில் அதனை கைவிட்டதாகவும் இதன்போது அப்பகுதியில் நாய்கள் குறித்த குழந்தையினை இழுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினைக்கொண்டிருந்த நபரினையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி, நீதிபதி ஆகியோரின் விசாரணைகளை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசு மரணம் தொடர்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.